தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 71.79 சதவீதமாக பதிவாகியுள்ளது.
சென்னை :
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு( ஏப்.6) நேற்று காலை 7 மணி முதல் இரவு 6 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இரவு 6 மணி முதல் 7 மணி வரை கொரோனவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் உடல்நிலை சூடு அதிகம் உள்ளவர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதியளித்தது.
இந்தநிலையில், இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகு நேற்று இரவு 8 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்பொழுது அவர், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் மாலை 7 மணி நிலவரப்படி 71.79 சதவீதமாக பதிவாகியுள்ளது என்று தெரிவித்தார்.
Read more – இன்றைய ராசிபலன் 07.04.2021!!!
மேலும், தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல்லில் 77.91 சதவீதமாக வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், சென்னையில் 59.40 சதவீதமாக வாக்குப்பதிவு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டார். வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் வாக்கு என்னும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டு, 24 மணி நேர சிசிடிவி பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். மே 2 ம் தேதி வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.