கமல்ஹாசனின் கார் மீது தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் அடித்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட வேட்பாளர் கோபிநாத்தை ஆதரித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் தொடர்ந்து காந்திசாலையில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது வாலிபர் ஒருவர் கமல்ஹாசனின் காரை வழிமறித்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் பாதுகாவலர்கள் அந்த நபரை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து அந்த நபர் கமல்ஹாசன் பயணித்த கார் மீது ஏறி முன்பக்க கண்ணாடியை தாக்கி சேதப்படுத்தினார். மீண்டும் பாதுகாவலர்கள் அந்த நபரை அப்புறப்படுத்த முயற்சித்தபோது, கமல் தான் தங்கியிருந்த ஹோட்டல் நோக்கி புறப்பட்டு சென்றார்.
Read more – இன்றைய ராசிபலன் 15.03.2021!!!
இந்தநிலையில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மீது தாக்குதல் நடத்திய அந்த நபரை பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஓன்று சேர்த்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தற்போது அந்த நபரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.