தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும்பணி தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
சென்னை :
தமிழகத்தில் எளிதாக மக்கள் புரிந்து கொண்டு ஓட்டு போடும் விதமாக (பூத் ஸ்லிப்) என்ற வாக்காளர் சீட்டை தேர்தல் ஆணையம் வழங்கும். இதன்மூலம் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கூட வாக்கு செலுத்த முடியும் .
இந்தநிலையில், வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் வீடு வீடாக வாக்காளர் சீட்டு விநியோகம் செய்யும்பணியை ஓட்டுச்சாவடிக்கு உரிய அதிகாரிகள் மூலம் தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது.
Read more – அரசியலுக்கு தாமதமாக வந்துவிட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் : மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்
தமிழகத்தில் இன்று (செவ்வாய்)2 வது நாளாக வாக்காளர் சீட்டு வழங்கப்பட்டு வரும் வேளையில் இந்த வார இறுதிக்குள் பெரும்பாலான வாக்காளர்களுக்கு வாக்காளர் சீட்டை ஒப்படைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.