மன்னர்கள் அந்த காலத்தில் நாட்டை காப்பதற்காக வாள் எடுத்தார்கள், இப்பொழுது நாட்டை அடைய வேல் எடுக்கிறார்கள் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்தநிலையில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு பேசியதாவது :
234 தொகுதிகளிலும் 10 சதவீதம் வாக்குகள் பெற்று நிரூபித்து காட்டிய கட்சி தேமுதிக மட்டுமே, பெண் வாக்காளர்கள் அதிகம் இருப்பதால் தமிழ்நாட்டை மற்றும் சக்தி பெண்களுக்கு உள்ளது என்று தெரிவித்தார். தேமுதிகவிற்கு மக்கள் சக்தி மட்டுமே போதும். வருகிற தேர்தலில் தேமுதிக எந்தக் கூட்டணியில் உள்ளதோ அந்தக் கூட்டணியே வெற்றி பெறும் என்றார்.
மேலும், மன்னர்கள் அந்த காலத்தில் நாட்டை காப்பதற்காக வாள் எடுத்தார்கள்,இப்பொழுது நாட்டை அடைய வேல் எடுக்கிறார்கள், இந்த தேர்தலில் வெற்றி பெற்று அதை விஜகாந்த்தின் காலடியில் சமர்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.