நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் 3 வது அணியாக உருவெடுத்தலும் தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று வைகோ தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி :
தமிழகத்தில் இன்னும் 3 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கட்சியின் கூட்டணி கட்சியான மதிமுக பொது செயலாளர் வைகோ திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
இந்தநிலையில், நேற்று நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறியதாவது: தமிழகத்தில் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். தி.மு.க. கூட்டணிக்கு மக்களின் ஆதரவு பெற்றுள்ளது என்றார்.
Read more – சி.வி.சண்முகத்தின் கிணத்தை காணோம், கிண்ணத்தை காணோம் மொமண்ட் : வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திரளான மக்களை சந்தித்து ஆதரவை திரட்டி வருகிறார். அவர் செல்லும் இடமெல்லாம் மக்களிடையே எழுச்சி உண்டாகிறது. மேலும், அ.தி.மு.க. அரசின் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர்.
நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தில் 3 வது அணியாக உருவெடுத்தலும், தி.மு.க. கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைப்பது உறுதி. கமல்ஹாசனுடன் கூட்டணி என்ற யூகத்திற்கு பதில் அளிக்க விரும்பவில்லை. தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் நடத்தவில்லை. தி.மு.க. கூட்டணி வெற்றிக்காக விரைவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவித்தார்.