விழுப்புரம் தென்பெண்ணை ஆறு தடுப்பணை உடைந்தது குறித்து மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தை வசைபாடியுள்ளார்.
விக்கிரபாண்டி :
விக்கிரவாண்டி தொகுதியில் நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சார நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், விழுப்புரத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றின் தடுப்பணை உடைந்து விழுந்த காட்சி ஒன்று போதாதா ? அதிமுகவின் ஆட்சி எப்படி ஊழல் காட்சிக இருக்கிறது என்று.
சட்டத்துறை அமைச்சர் சண்முகம் சி.வி.சண்முகம் இதுகுறித்து விளக்கம் அளித்த போது, காலையில் அணை என்றும், இடிந்து விழுந்த பிறகு மாலையில் சுவர் என்றும் கட்டுக்கதை கட்டி வருகிறார். 25 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த அணையில் எத்தனை கோடி இவர்கள் எடுத்துக்கொண்டார்கள் என்று தெரியவில்லை.
Read more : இன்றைய ராசிபலன் 13.02.2021!!!
நடிகர் வடிவேல் ஒரு படத்தில் குறிப்பிட்டபடி ஒரே இரவில் கிணத்தை காணவில்லை என்று போலீசில் புகார் அளிப்பது போல, சி.வி. சண்முகமும் என் கிணத்தை காணோம், கிண்ணத்தை காணோம் என்று அளந்து விட்டு கட்டிய தடுப்பணையை சுவர் என்றும் அதற்கு 25 கோடி செலவு என்றும் ஒப்பந்தக்காரர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ரயில் இஞ்சினை திருடுனவனை விட்டுட்டான். அந்த இன்ஜினில் இருந்து விழுந்த கறி துண்டை திருடியவனை புடிச்சிக்கிட்டாங்க. இது தலைவர் கலைஞர் உடைய வசனம். அதுபோல தான் தற்போது உள்ள அதிமுகவின் ஆட்சியும் என்று மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.