எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமையவில்லை எனில் பொதுவாழ்க்கையில் இருந்து விலக தயார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை :
மதுரை தோப்பூர் பகுதியில் 200 ஏக்கர் நிலப்பரப்பிலான 750 படுக்கை வசதியுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை ரூபாய் 1266 கோடி செலவில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக கடந்த 2019 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இந்தநிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய அதிமுக சார்பில் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து, உசிலம்பட்டி அருகே செக்காணூரணியில் நடந்த மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:
Read more – விளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி நடத்துகின்றனர் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றச்சாட்டு
மதுரையில் நிச்சயமாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். எய்ம்ஸ் மருத்துவமனைஅமையவில்லை எனில் பொதுவாழ்க்கையிலிருந்து விலகத் தயார் என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்கப்பட்டால் ஸ்டாலின் பொதுவாழ்க்கையில் இருந்து விலகத் தயாரா என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சவால் விடுத்துள்ளார்.