விளம்பரத்திற்காகவே விவசாயிகள் பேரணி நடத்துகிறார்கள் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே குற்றம் சாட்டியுள்ளார்.
புதுடெல்லி :
மும்பையில் ராஜ்பவன் நோக்கி 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் பிரமாண்ட பேரணி நடத்தினர். வெகுநேரம் காத்திருந்த விவசாயிகள் ஆளுநரை சந்திக்க முடியாததால் ஆவேசம் அடைந்து கோரிக்கை மனுவை கிழித்தெறிந்தனர்.
மேலும், இன்று டெல்லியில் நடக்கும் 72 வது குடியரசு தின விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் மிகப்பெரும் டிராக்டர் பேரணி நடத்தி வருகின்றனர்.
Read more – டெல்லியை நோக்கி படையெடுத்த டிராக்டர்கள் : 3 வேளாண் மசோதாக்களை திரும்ப பெறக்கோரி பேரணியை தொடங்கிய விவசாயிகள்
இதற்கிடையே மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியதாவது ; விளம்பரத்துக்காக விவசாயிகள் போராட்டம் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளார்.மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கு தேசியவாத காங்கிரஸ் மற்றும் பல முன்னணி கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் விவசாயிகளை அவமானப்படுத்தியதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.