சசிகலா தமிழகம் வருகை குறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசிற்கு எதிராக கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.
சென்னை :
சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த 27 ம் தேதி விடுதலை ஆனார். ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 8 ம் தேதி அன்று பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் சசிகலா சென்னை திரும்பினார். மேலும், பயண கலைப்பு மற்றும் உடல்நிலை காரணமாக சசிகலா அவரது தி.நகர் வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். சசிகலாவின் இந்த வருகையையொட்டி சென்னையில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
Read more – திமுக ஆட்சிக்காக வேல் எடுத்தா ஓட்டு.. நாங்க யாத்திரைக்கு எடுத்தா ‘கேட்’ டா.. தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
இதையடுத்து அரசியல் குறித்து தொடர்ந்து பல சர்ச்சை கருத்துகளை கூறி வரும் நடிகை கஸ்தூரி தற்போது சசிகலா வருகை குறித்தும், தமிழக அரசிற்கு எதிராகவும் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நினைவிடத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரச்சார கூட்டம் ரத்து, சாலைகளை மூடறாங்க, டிவி கூட நிறுத்திட்டாங்களாம். ஹூம். COVID க்கு நிறுத்தவேண்டியதெல்லாம் சசிகலாவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மாக் பக்கம் காரை திருப்புனாங்கன்னா புண்ணியமா போவும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்த பதிவானது பலரால் பகிரப்பட்டு வருகிறது.