டெல்லியில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் சதீஷ் சர்மாவின் உடலை ராகுல் காந்தி சுமந்து சென்றுள்ளார்.
டெல்லி :
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சதீஷ் சர்மா(73) நேற்று முன்தினம் கோவாவில் காலமானார். இவர் 1993 – 1996 ஆம் ஆண்டு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தவர். மறைந்த கேப்டன் சதீஷ் சர்மா உடலை மரியாதை செய்யும் விதமாக ராகுல்காந்தி தோளில் சுமந்து சென்றுள்ளார். தற்போது இதைப்பற்றிய புகைப்படம் வைரலாகி வருகிறது.
கேப்டன் சதீஷ் சர்மாவின் மறைவிற்கு ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார். அதில், கேப்டன் சதீஷ் சர்மா மறைந்ததைக் கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அன்பும் இரங்கலும் தெரிவித்துக்கொள்கிறேன். நாங்கள் அவரை பெரிதும் இழந்து தவித்து வருகிறோம் என பதிவிட்டிருந்தார்.