ரயில் இயங்கும் தண்டவாளத்தில் பெண் ஒருவர் தலைவைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து:
புகைப்படத்தின் மோகம் நாளுக்கு நாள் மனிதனை புது வகையில் சிந்தித்து சிதைத்து வருகிறது. ஏற்கனவே பல செல்ஃபி மூலம் ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டு வருகின்றனர். ஒரு சிலரின் புகைப்பட ஆசையால் தான் நிதானம் இழந்து அது அவர்களின் உயிரையும் பறித்து விடுகிறது.
அந்த வரிசையில், இங்கிலாந்து பெண்மணி ஒருவர் செய்த செயலால் இங்கிலாந்து ரயில்வே துறை சற்று மிரண்டு போய்விட்டது. இங்கிலாந்தில் ரயில் பயணிக்கும் ஒரு முக்கிய ரயில் தண்டவாளத்தில் படுத்துக்கொண்டு புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்த அந்தப் பெண் சி.சி.டி.வி காட்சிகள் மூலமாக இங்கிலாந்து ரயில்வேயிடம் பிடிபட்டுவிட்டார்.
Read more – இன்றைய ராசிபலன் 24.01.2021!!!
இங்கிலாந்தின் நெட்வொர்க் ரயில் நிர்வாகம் அந்த பெண்ணிற்கு எச்சரிக்கை விடுத்து, அவர் தொடர்பான அந்த வீடியோ காட்சிகளை ட்விட்டர் பகிர்ந்துகொண்ட நெட்வொர்க் ரயில் நிர்வாகம் கூறியதாவது: “இல்லை, இல்லை, இல்லை. லெவல் கிராசிங்குகள் புகைப்படம் எடுப்பதற்கான இடம் அல்ல. லெவல் கிராசிங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள், நாம் நமது குழந்தைகளுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நாம் செய்யும் சிறு தவறு கூட வாழ்க்கையை ஒரே நிமிடத்தில் மாற்றும் விளைவுகளை ஏற்படுத்தும்” என தெரிவித்திருக்கிறது.