சீன துறைமுகங்களில் இந்திய கப்பல்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதால் இதற்கு சீன- இந்திய எல்லை பிரச்சனை தான் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.
பீஜிங் :
இந்தியாவை சேர்ந்த இரண்டு சரக்கு கப்பல்கள் சீனாவின் உள்ள ஜிங்டாங், காபீடியான் துறைமுகங்களில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படாததால் கடலில் நங்கூரமிட்டு பல மாதங்களாக 39 ஊழியர்கள் தவித்து வருகின்றனர்.
இதுதொடர்பாக, மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா சீன அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியபோது, துறைமுகங்களில் 2 கப்பல்களையும் சரக்குகளை இறக்கவும், பணிக்குழு மாற்றத்துக்கும் அனுமதிக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில், சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக அனைவரும் தனிமை படுத்தப்பட வேண்டும். அந்த முறையை பின்பற்றினால் கப்பல் பணிக்குழுவை மாற்றிக்கொள்ளலாம். ஆனால், ஜிங்டாங் துறைமுகத்தில் பணிக்குழு மாற்ற அனுமதி இல்லை என்றார் . மேலும் இங்கு அவர்களை அனுமதிக்கப்படாத நிகழ்விற்கும் சீன- இந்திய எல்லை பிரச்சனைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
காபீடியான் துறைமுகத்தில் மற்றொரு கப்பலை அனுமதிக்காதது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.