பிரிட்டனில் விட்டில் இருந்த லேப்டாப் வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு குடும்பம் தங்களது வீட்டை இழந்து தெருவுக்கு வந்துள்ளது.
பிரிட்டனின் லிவர்பூலில் Joanne Bresnahan என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன் அவரது மகள் Rebeccaவின் படுக்கை அறையில் இருந்து ஏதோ சப்தம் வந்ததால் அச்சமடைந்து Joanne Bresnahan அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, அந்த அறையில் இருந்த லேப்டாப் வெடித்து சிதறியதால் அந்த அறை முழுவதும் தீ பற்றி எறிந்து கொண்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் நிலைமையை சுதாரிப்பதற்குள் தீ மளமளவென வீட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அவரும் தன்னால் முயன்ற வரை தண்ணீரை கொண்டு தீயை அணைக்க முயற்சித்தார். இருப்பினும் அவரது வீடு முழுவதும் தீக்கு இறையானது. இதனால், அந்த குடும்பம் தற்போது தங்க வீடு இல்லாமல் தெருவுக்கு வந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர்தான் Rebeccaவின் மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் கட்டியை அகற்ற அந்த குடும்பம் பெரும் செலவு செய்தது. அதனால், தற்போது தீயினால் சேதமடைந்த தங்களது வீட்டை சரி செய்ய அந்த குடும்பம் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
இதையும் படியுங்கள் : கருணை அடிப்படையில் வேலைபெற தந்தையைக் கொன்ற மகன்