இந்திய வம்சாவளியினரான கௌதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோரை கூடுதல் உறுப்பினர்களாக அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் நியமனம் செய்துள்ளார்.
வாஷிங்டன் :
அமெரிக்காவில் கொரோனா பரவல் தொற்றுக்கு மத்தியில் கடந்த மாதம் 3 ம் தேதி அதிபர் தேர்தல் நடந்து முடிந்தது. அந்த தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிட்டு ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார். டிரம்ப் இன்றுவரை தான் தோல்வியடைந்ததை ஏற்கமறுத்து வந்த நிலையில் வரும் ஜனவரி மாதம் 20 ம் தேதி ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவி ஏற்கிறார். இதேபோன்று துணை அதிபராக இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜோ பைடன் பதவி ஏற்க உள்ள நிலையில் அதிபருக்கான அதிகாரத்துடன் அ பல்வேறு பதவிகளுக்கு ஆட்களை நியமனம் செய்து வருகிறார். இதில் இந்திய வம்சாவளிகளான கெளதம் ராகவன் மற்றும் வினய் ரெட்டி ஆகியோருக்கு இயக்குனர் பதவிகளை ஜோ பைடன் வழங்கி உள்ளார். மேலும் கெளதம் ராகவன் ஏற்கனவே பைடன் அறக்கட்டளைக்கு ஆலோசகராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
Read more – இன்றைய ராசிபலன் 23.12.2020!!!
இதேபோன்று, வெள்ளை மாளிகை மூத்த பணியாளர்களுக்கான கூடுதல் உறுப்பினர்களின் இந்திய வம்சாவளியினரை சேர்ந்த வேறு சில பெயர்களையும் பைடன் அறிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.