நிலா மாதிரி முகம் ஜொலிக்கும் என்று நம்பி மஞ்சள் பேக் போட்ட ஸ்காட்லாந்து பொண்ணுக்கு நடந்த சோகம்.
ஸ்காட்லாந்தை சேர்ந்த லாரன் ரென்னி என்பவர் டிக்டாக்கில் பிரபலமானவர். சுமார் 17000 பேர் அவரை டிக்டாக்கில் பின் தொடர்ந்து வருகின்றனர். முகப்பருக்களினால் அவதிப்பட்டு வந்த அவர் யூடியூபில் வந்த வீட்டு வைத்தியத்தைப் பார்த்து ஒரு பேஸ்பேக் தயாரித்துள்ளார். மஞ்சள் ஃபேஸ் மாஸ்க் போட்டால் முகம் நிலா மாதிரி ஜொலிக்கும் என்று யாரோ சொல்லி இருக்கிறார்கள். அந்த வீடியோவில் சொன்னபடி மஞ்சளை கொண்டு ஃபேஸ் மாஸ்க் தயாரித்த அவர் அதை போட்டுக்கொண்டுள்ளார். அதோடு “இன்னும் கொஞ்ச நேரத்து நான் நிலா மாதிரி மின்னப் போறன்னு” சொல்லி போஸ்ட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த மாஸ்க்கை எவ்வளவு நேரம் போட்டிருக்க வேண்டும் என்பதை சரியாக கவனிக்காத அவர் அதை நீண்ட நேரம் அப்படியே விட்டு இருக்கிறார். சில மணிக்கு பிறகு அந்த மாஸ்க்கை எடுத்த போது தான் அவருக்கு அந்த அதிர்ச்சி காத்திருந்தது. லாரனின் முகம் முழுவதும் மஞ்சளாக மாறிப் போயுள்ளது. சோப் மற்றும் தண்ணீர் பயன்படுத்தியும் மஞ்சள் போகவில்லை. சுமார் 20 நாட்களுக்கு மேல் முகம் மஞ்சள் நிறத்தில் இருந்தது’ என அவர் தெரிவித்துள்ளார்.