போடியில் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து முதல்வர் நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முன்னணி கட்சிகளான திமுக, அதிமுக கட்சிகள் தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்திக்கின்றனர்.
இந்தநிலையில், ஏற்கனவே துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மேற்கொண்ட நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடி நாயக்கனூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
Read more – இன்று முதல் தொடங்குகிறது தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தபால் வாக்குப்பதிவு…
சசிகலாவிற்கு ஆதரவாக ஓபிஎஸ் செயல்படுகிறார் என்று கருத்து பரவும் நிலையில், முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்தநிலையில், இருவரும் ஒன்றாக பிரச்சாரம் மேற்கொள்வது அதிமுக தொண்டர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.