தமிழக சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை :
சென்னை வடபழனியில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்துவும் ஒன்றாக செய்தியாளர்களை சந்தித்தனர். ஏப்ரல் 6 ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலை இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து எதிர்கொள்ளப்போவதாக அறிவித்தனர்.
அதன்பிறகு, சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத் குமார் இதுகுறித்து பேசுகையில், அதிமுக இதுவரை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் தற்போது உள்ள கூட்டணியில் இருந்து விலகி மாற்றத்திற்கான முதல் கூட்டணியாக இதை அமைத்துள்ளோம். விரைவில் எங்கள் கூட்டணி கட்சியுடன் மக்கள் நீதி மய்யமும் இணையும் என்று எதிர் பார்க்கிறோம் என்றார்.
Read more – பக்கா பிளான்.. மேற்கு வங்கத்தில் 8 கட்டம்.. மோடியின் தேர்தல் திட்டம்
தொடர்ந்து ரவி பச்சமுத்து பேசுகையில், ஓட்டுக்கு பணம் தராத, சாதிமத பேதமின்றி மக்களுக்கு சேவை செய்யும் கொள்கையில் ஒருமித்த கருத்துடன் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கட்சிக்கு தனி ஒரு அங்கீகாரம் கிடைக்கவே இந்த தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததாக தெரிவித்தார்.