திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருச்சி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக, அதிமுக கட்சிகள் மக்களை கவர தொடர்ந்து பல வாக்குறுதிகளை வழங்கி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று திமுக சார்பில் திருச்சியில் நடைபெற்ற ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பொதுக்கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள் என்ற பெயரில் தொலைநோக்கு திட்டமும் வெளியிடப்பட்டது.
அந்த உறுதிமொழிகள் பிணவருமாறு :
- திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும்.
*ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., கல்வி உதவி தொகை இருமடங்கு உயர்த்தி தரப்படும்.
*மனித கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு நிலை முற்றிலும் அகற்றப்படும்.
- தமிழ்நாட்டில் 32 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் வகையில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி திட்டம் .
*ஆண்டுக்கு 10 லட்ச புதிய வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டு வேலையின்மை ஒழிக்கப்படும்.
*கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் இணைப்பு வசதி
- எந்த வானிலை வந்தாலும் அசைந்து கொடுக்காத தரத்துடன் கூடிய சாலைகள் அமைக்கப்படும் என்ற உறுதிமொழிகளை வெளியிட்டுள்ளார்.