சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் திமுகவின் பொதுக்குழு கூட்டம் மற்றும் மாநில மாநாட்டை ஒத்தி வைக்கப்படுவதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை :
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரு கட்டமாக நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக திமுக சார்பில் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 7 ம் தேதி சென்னையில் நடைபெறும் என்று அறிவித்திருந்தார்.
அதேபோல், தி.மு.க.வின் 11வது மாநில மாநாடு திருச்சியில் அடுத்த மாதம் 14 ம்தேதி நடத்தப்படும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், பொதுக்குழு மற்றும் மாநில மாநாடு திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Read more – கமலுடன் இணைகிறாரா பழ. கருப்பையா… மாற்று அரசியலை முன்னெடுக்கும் மய்யம்…
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு-புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்ச் 7 ம் தேதி நடைபெற இருந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டமும், மார்ச் 14 ம் தேதி திருச்சியில் நடைபெற இருந்த தி.மு.க. மாநில மாநாடும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.