வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலமுடன் வீடு கட்டித்தரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் :
தமிழகத்தில் இன்னும் 2 மாதங்களில் சட்டசபை தேர்தல் வர நிலையில் அரசியல் களங்கள் சூடுபிடிக்க தொடங்கியது. ஆளும் கட்சிகள் முதல் எதிர் கட்சிகள் வரை வாக்குறுதிகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ரூ.1,503 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர், தமிழக அரசின் குடிநீர் திட்டங்களால் மாநிலத்தில் இனி குடிநீர் பஞ்சமே இருக்காது என்றார். தமிழகத்தில் நீர் ஆதாரத்தை மேம்படுத்தவே குடிமராமத்து திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
Read more – தமிழக அரசின் கடன் ரூ. 5. 7 லட்சம் கோடியாக உயர்வு : துணை முதல்வர் தகவல்
மேலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு 2 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டித்தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.