பாஜக வேட்பாளர் அண்ணாமலைக்கு திமுக எம்.பி. கனிமொழி சவால் விடுத்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போடி :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சி அமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் இரு தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை, அதே தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். அதில், செந்தில் பாலாஜி போன்ற நபர்களை தூக்கி போட்டு மிதிக்க வேண்டும் என்ற முறையில் பேசினார்.
இந்தநிலையில், போடிநாயக்கனூரில் திமுக வேட்பாளர் தங்க தமிழ் செல்வனை ஆதரித்து பிரச்சாரம் செய்த திமுக எம்.பி கனிமொழி பாஜக வேட்பாளருக்கு பகிரங்கமாக சவால் விடுத்தார். அதில், அண்ணாமலை என பெயர் இருப்பதால் அவர் தன்னை ரஜினி நினைத்து கொண்டார் போல, திமுக இத்தனை ஆண்டு கால அரசியலில் அத்தனை பிரச்சினைகளையும் ஊதி தள்ளிவிட்டு தான் வந்துள்ளது என்றார்.
Read more – திமுகவின் வாகனத்தை வழிமறித்து பேனரை கிழித்த அதிமுகவினர்… தமிழகம் கண்ட ஆரோக்கிய அரசியல் இதுதானா ?
மேலும், திமுகவினரை யாராலும் மிரட்ட முடியாது, நாங்கள் எழுந்து நின்றாலே உங்களால் தாங்க முடியாது. முடிந்தால் திமுகவினர் மீது கையை வை பார்க்கலாம் என்று என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.