சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை ரேஷன் அரிசியில் ஆரத்தி எடுத்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சோழவந்தான் :
மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட மாணிக்கம், அலங்காநல்லூர் பகுதிகளில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது, குமாரம் பகுதியில் அவர் வாக்குச் சேகரிக்க சென்றபோது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மோசமாக உள்ளதைச் சுட்டி காட்டும் விதமாக ஆரத்தி தட்டில் ரேஷன் அரிசியை பரப்பி மாணிக்கத்திற்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.
அப்பொழுது, அப்பகுதி மக்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதால் அடுத்த முறையாவது தரமான அரிசியை வழங்கவேண்டும் என்று பெண்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணிக்கம் சிரித்துக்கொண்டே அந்த பகுதியை விட்டு விரைவாக நடையை கட்டினார்.
Read more – ஜெயலலிதாவுக்கு இருந்த பொறுமையும், பெருமையும் எடப்பாடிக்கு இல்லை : பிரேமலதா விஜயகாந்த் அதிரடி
பின்னர் அவர் வாடிப்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தபோது மாணிக்கம் தேனி எம்.பி ரவீந்திரநாத்குமார் காலில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.