வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவதும், வராத ஆட்சிக்கு தி.மு.க.வினர் இஷ்டத்திற்கு வாக்குறுதி அளிப்பதும் தான் இன்றைய நிலை என்று நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.
ராஜபாளையம் :
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6 ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் ஆட்சியமைக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், ராஜபாளையத்தில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை ஆதரித்து நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டபோது கூறியதாவது ;
வெற்றிநடை போடும் தமிழகம் தொடர்ந்து தமிழகத்தில் வீறுநடை போட வேண்டும். தொடர்ந்து அதிமுகவிற்கு ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள். ராஜேந்திர பாலாஜியை மீண்டும் அமைச்சர் பதவியில் அமர செய்யுங்கள்.
Read more – பார்சல் கேட்பார்கள்.. காசு கேட்டால் பாக்ஸிங் செய்வார்கள்.. பிரியாணி கடைக்காரரிடம் பிரியமாய் பேசிய ஓபிஎஸ்
திமுகவை ஒருபோதும் நம்பாதீர்கள். 10 ஆண்டுகளாக காய்ந்து போய் அகோரப்பசியில் இருக்கிறார்கள். பணத்தை மட்டுமல்ல, மக்களையும் புடுங்கி சாப்பிட்டு விடுவார்கள். வராத மழைக்கு வானிலை அறிக்கை கூறுவது தான் திமுகவின் நிலைப்பாடு. எந்த பிரச்சினையை தி.மு.க. ஆட்சி காலத்தில் தீர்த்து வைத்தார்கள். 100 நாட்களில் பிரச்சனைகளை சரி செய்வது நடக்காத காரியம் என்று தெரிவித்துள்ளார்.