நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
சென்னை :
நாம் தமிழர் கட்சியில் இருந்து நடிகர் மன்சூர் அலிகான் விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கடந்த 2019 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் மன்சூர் அலிகான் 54,957 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்தார்.
மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட போவதாகவும் ஒரு தனியார் நிறுவன வீடியோ பேட்டியில் தெரிவித்திருந்தார்.
Read more – இந்தியளவில் ட்ரெண்டாகும் ‘ மோடி ஜாப் டூ ‘ : திணறும் மத்திய பா.ஜ.க
இந்தநிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது : சட்டசபை தேர்தலில் சீமான் எனக்கு தொகுதி தருவார் என்று நினைத்தேன் ஆனால் ஒதுக்கவில்லை இது வருத்தத்தை தருகிறது. அதனால் தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.