சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியுடன் முதல் ஆளாக வாக்கினை பதிவு செய்தார்.
சென்னை :
தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. தமிழகத்தில் மொத்தமாக 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு கொரோனா பரவலில் இருந்து மக்களை பாதுகாக்க சமூக இடைவெளியும் கடைபிடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை திருவான்மியூர் வாக்குச்சாவடியில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியுடன் வந்து மக்களோடு மக்களாக வரிசையில் நின்றனர். அதன்பிறகு சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும் இருவரும் தங்களது ஓட்டுகளை முதல் ஆளாக பதிவு செய்தனர்.
Read more – இன்றைய ராசிபலன் 06.04.2021!!!
கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருவதால் தங்களை பார்க்க வந்த ரசிகர் கூட்டத்திடம் செல்பி எடுக்க வேண்டாம் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அஜித் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.