நாளை நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து வாக்களிக்க இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால் நேற்று இரவு 7 மணியுடன் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டனர். இதையடுத்து, நாளை பொதுவிடுமுறையை அறிவித்த தமிழக அரசு, ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கவும் உத்தரவிட்டது. இதனால் வெளியூரில் இருந்து பல வாக்காளர்கள் சொந்த ஊர்களை நோக்கி படை எடுத்துவருகின்றனர்.
இந்தநிலையில், சென்னையில் இருந்து வாக்களிக்க இதுவரை 4 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் தமிழக அரசு சார்பில் கடந்த 1 ம் தேதி முதல் 14, 215 பேருந்துகள் தேர்தலை முன்னிட்டு இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்தது.
Read more – இன்றைய ராசிபலன் 05.04.2021!!!
அதனடிப்படையில், இன்று காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர் மற்றும் கோயம்பேடு பகுதிகளில் சொந்த ஊருக்கு செல்வதற்கு பயணிகள் குவிந்து வருகின்றனர்.