சென்னையில் மாஸ்டர் படம் பார்க்க வந்த மலேசிய பெண்ணுக்கு டிக்கெட் கிடைக்காததால் ஒரு தியேட்டரையே புக்கிங் செய்து படம் பார்த்துள்ளார்.
சென்னை :
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு வெளியாகி விமர்சனங்கள் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் திரையரங்கை தொடர்ந்து கடந்த வாரம் முதல் ஓ.டி.டியிலும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், மலேசியாவில் வாழ்ந்து வரும் ஆஷ்லினா என்ற பெண் மாஸ்டர் படம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் மலேசியாவில் கொரோனாவின் தாக்கத்தினால் இன்று வரை கடுமையான கட்டுப்பாடுகளினால் திரையரங்கள் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதையடுத்து ஆஷ்லினா தான் பிறந்து வளர்ந்த ஊரான சென்னைக்கு விமானம் மூலம் வந்துள்ளார்.
Read more – இன்றைய ராசிபலன் 03.02.2021!!!
நீண்ட முயற்சிக்குப் பின்னர் மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த ஆஷ்லினா வந்தவுடன் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்காமல் முதல் வேலையாக தியேட்டரில் மாஸ்டர் படம் பார்ப்பதற்காக சென்றார். ஆனால் அங்கு டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஏமாற்றம் அடைந்த அவர் அண்ணாசாலையில் உள்ள ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் ஒட்டுமொத்த இருக்கைகளையும் முன்பதிவு செய்துள்ளார். 150 இருக்கைகள் கொண்ட அந்த திரையரங்கில் மொத்தமாக புக் செய்து சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பு விடுத்து விசில் அடித்து படம் பார்த்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான நிகழ்வை ஆஷ்லினா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அந்த பதிவில் மாஸ்டர் திரைப்படத்தை பார்ப்பதற்காக மட்டுமே மலேசியாவில் இருந்து சென்னை வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.