வருகின்ற 30 ம் தேதி மதுரை டி.குன்னத்தூரில் ஜெயலலிதாவிற்கு கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்வர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள்.
பேரையூர்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.குன்னத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு கோவில் கட்டும் பணி நடந்து வருகிறது. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மேற்பார்வையில் இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நான்கு புறத்திசைகளிலும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மைய பகுதியில் வெண்கலத்திலான ஜெயலலிதா முழு உருவ சிலை நிறுவப்படுகிறது. அதனைத்தொடர்ந்து மேலும் அங்கு மாணவர்களுக்கான பயிற்சி கூடம், தியான மண்டபம், கலையரங்கம் அமைக்கப்படுகிறது.ஜெயலலிதா கோவிலிற்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்தது.
Read more – தொடரும் இந்திய அணிக்கு சிக்கல் : டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விஹாரி, பும்ரா விலகல்
இதுகுறித்து, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்: ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவின் புகழுக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. வருகின்ற 30 ம் தேதி ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்டு வரும் கோவிலை முதல்வர், துணை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள். இதில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.