மருத்துவ கலந்தாய்வுக்கு வரும் மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவப்ப டிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுப் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் கலந்தாய்வு நடைபெறும் எனக் கூறினார்.
கலந்தாய்விற்கு நாளொன்றுக்கு 500பேர் கலந்தாய்வில் பங்கேற்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், மாணவருடன் பெற்றோர் ஒருவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மருத்துவ கலந்தாய்வில் தமிழக அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தின் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 405பேருக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, கொரோனா முன்னெச்சரிக்கையாக மாணவர்கள் நலன் கருதி, நேரு விளையாட்டு அரங்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் என விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இந்நிலையில், வெளியூர் மாணவர்களின் வசதிக்காக மருத்துவ கலந்தாய்வு நடைபெறும் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு தகவல்தெரிவித்துள்ளார். கோயம்பேடு பேருந்து நிலையம், எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துள் இயக்கப்பட உள்ளதாக நாராயண பாபு தெரிவித்துள்ளார்.