10 மற்றும் 12 ம் வகுப்பை தொடர்ந்து மற்ற வகுப்புகளுக்கும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
தமிழகத்தில் வருகின்ற 19 ம் தேதி முதல் 10 மற்றும் 12 ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருந்தார்.இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:
முதல்கட்டமாக திறக்கப்படும் 10, 12ம் வகுப்புகளுக்காக 6,029 பள்ளிகள் தயாராக உள்ளன. விருப்பமுள்ள 10, 12 ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு வரலாம்.அதனைத்தொடர்ந்து 98 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர்.
Read more – 50 வது நாளாக தொடரும் டெல்லி விவசாய போராட்டம் : மத்திய அரசின் முடிவு தான் என்ன ?
மேலும், முதல்வரின் ஆலோசனைக்கு பிறகு கலந்தாலோசித்து மற்ற வகுப்புகளுக்கும் படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.