மதுரை பாண்டிகோவிலில் மு.க.அழகிரி இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
மதுரை :
முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து தனது ஆதரவாளர்களுடன் மதுரை பாண்டிகோவிலில் ஆலோசனை நடத்துகிறார். கடந்த 2014 ம் ஆண்டு முன்பு வரை தென் தமிழகத்தின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி திமுக கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மு.க.அழகிரி அன்று முதல் இன்று வரை எந்த ஒரு அரசியல் கட்சிகளிலும், கூட்டங்களிலும் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தார். தற்போது வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து மதுரையில் ஜனவரி 3 ம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தப்படும் தெரிவித்து இருந்தார்.
Read more – அமெரிக்காவின் சரித்திரத்தை 2021 ல் இருந்து மாற்றி அமைக்க இருக்கிறோம் : கமலா ஹாரிஸ்
இந்தநிலையில், தமிழகத்தில் இருந்து மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் தற்போது மதுரை நோக்கி படை எடுத்து வருகின்றனர். மதுரை பாண்டிகோவிலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இன்று நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை பொறுத்தே மு.க.அழகிரி தனிக்கட்சி தொடங்குவாரா என்று விடை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.