திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் உள்ள கீழமலைப் பகுதி அருகில்கே.சி.பட்டி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் மாலதி ( 28). இவருக்கு திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் தனியாக வாழ்ந்து வந்த போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருடன் தொடர்புஏற்பட்டுள்ளது.
திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகிய தொடர்பின் காரணமாகஆண் குழந்தை பிறந்துள்ளது. இடையே சதீஷ்க்கு அவரது வீட்டார் வேறொரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்து வைத்துள்ளார்கள்.
இதனை தெரிந்து ஆத்திரம் கொண்ட மாலதி, தனது குழந்தையுடன் சதீஷ் வீட்டுக்கு சென்று அவரிடம் நியாயம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து தனது குழந்தையை அருகில் உள்ளடீக்கடையில் அமர வைத்துவிட்டு, சதீஷ் வீட்டு வாசல் முன்பு பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில்வெளியாகி மிகப்பெரிய பாதிப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தியிருந்தது.
பெட்ரோல் ஊற்றி தீக்குளித்ததால் படுகாயம் அடைந்த மாலதி சிகிச்சை பலன் இன்றிஇறந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை பட்ட வந்த நிலையில் மாலதி தீக்குளித்ததை வீடியோ படமெடுத்த சரவணக்குமார் என்பவரை விரைந்து கைது செய்தனர். அவனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவன், சதீஷின் அண்ணன் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அடுத்து மாலதியை ஏமாற்றிய சதீஷ் மற்றும் மாலதி தீக்குளித்தபின் காப்பாற்றுங்கள் என அலறல் சத்தம் கேட்ட பின்பும் கடைசிவரை தீக்குளித்த பெண்ணை காப்பாற்றாமல் வீடியோ மட்டுமே எடுத்துக் கொண்டிருந்த சரவணக்குமாரிடம் தற்போது தீவிரவிசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதுபோன்ற மனித மிருகங்கள் நம்மிடையே உலாவுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.