தென்காசியில் அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கடனா நீர்த்தேக்கங்களில் 21-ந் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தண்ணீர் திறப்பு
தென்காசி மாவட்டத்திலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு நடப்பாண்டு கார் சாகுபடிக்கு தண்ணீர் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, தென்காசியிலுள்ள கடனா, அடவிநயினார்கோவில், ராமநதி மற்றும் கருப்பாநதி நீர்த்தேக்கங்களின் கீழ் உள்ள கால்வாய்களின் மூலம் பாசனம் பெறும் நிலங்களுக்கு கார் சாகுபடிக்கு வரும் 21-ந் தேதி முதல் நவம்பர் 25-ந் தேதி வரை 97 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், தென்காசி, செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகியவற்றில் உள்ள 8,225.46 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு, உயர் மகசூல் பெற வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.