தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து பல செயல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இதில் மக்கள் பொது இடங்களில் அவசியமில்லாமல் கூட வேண்டாம் , முக கவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது என்றும் , வாகனங்களில் குறிப்பிட்ட அளவு நபர்கள் மட்டுமே பயணம் செய்ய வேண்டும் என காவல்துறை அறிவுறுத்திய வண்ணம் உள்ளது. ஆனால்,அரசின் இதுபோன்ற பல அறிவுறுத்தல்களை இப்பொழுதும் சிலர் ஏற்க மறுத்து தங்கள் வாகனங்களில் தேவையில்லாமல் சுற்றி வருகிறார்கள் இதனை கண்காணிக்கும் பொருட்டு காவல்துறையினர் அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்வதுடன் அவர்களுக்கு அபராதமும் விதித்து உத்தர விடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு மீறி வெளியில் வந்தவர்களிடம் மட்டும் இருந்து சுமார் ரூபாய் 21 .68 கோடி அபராதத் தொகையாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதில் 6.93 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் மேலும் 9.95 லட்சம் பேர் கைது செய்யப்பட்ட பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சுமார் 8.98 லட்சம் பேர் மீது வழக்குப்பதிவு மட்டும்செய்துள்ளனர்.