ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் வேதா நினைவில்லமாக மாற்றம் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
சென்னை :
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தை கையகப்படுத்திய தமிழக அரசின் உத்தரவை மீறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக்கும் மற்றும் ஜெ.தீபாவும் வழக்கு பதிவு செய்தனர்.
நீதிபதி சேஷசாயி முன் நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கானது ஜெயலலிதா மறைவிற்கு பின், தங்களை வாரிசுகளாக அறிவித்துள்ள நிலையில் வேதா நிலையத்தை அரசுடமையாக்க சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தீபக்கின் வழக்கறிஞர் கூறினார்.
அதற்கு தமிழக அரசு சார்பில் கையகப்படுத்தும் நடவடிக்கையில் அனைத்து சட்டவிதிகளும் பின்பற்றப்பட்டதாகவும், வீடு தற்போதுமனுதாரர்களின் வசம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதா எப்படி வாழ்ந்தார் என்பதை மக்களுக்கு காட்டவும், நினைவுகளை பாதுகாக்கவும் தான் வேதா நிலையம் நினைவில்லமாக மாற்றப்படுவதாகவும், வணிக பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படவில்லை என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
Read more – மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து இந்திய பிரிவின் டிக் டாக் மூடல் : 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்
இதையடுத்து, நீதிபதி உத்தரவின் அடிப்படையில் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக திறந்து வைக்க தடை விதிக்க மறுத்து, நிபந்தனைகளுடன் நினைவு இல்லத் திறப்பு விழாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. எனினும் தீபா, தீபக் முன்னிலையில் வீட்டில் உள்ள பொருட்களை கணக்கெடுத்த பிறகே பொதுமக்களுக்கு அனுமதிக்க வேண்டும்.அதுவரை அனுமதி இல்லை என்று உத்தரவு பிறப்பித்தார்.
தற்போது, ஜெயலலிதாவின் நினைவு இல்லத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான பன்னீர்செல்வம் தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.