சென்னையில் நாளை முதல் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி செல்ல கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த 1 மாத காலமாக கொரோனா பரவலின் தாக்கம் வேகமெடுக்க தொடங்கியது. இதனால் ஏப்ரல் 10 ம் தேதி முதல் தமிழக மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு நேற்று வெளியிட்டது. அதன்படி, உள்ளூர் மற்றும் வெளியூர் பேருந்துகளில் உட்கார்ந்து செல்ல மட்டுமே அனுமதிக்கப்பட்டு, நிற்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், சென்னை பொதுமக்கள் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பயணிக்க நாளை முதல் 300லிருந்து 400 பேருந்துகள் வரையில் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும், குறிப்பாக தாம்பரம், செங்கல்பட்டு, பெரம்பூர், அம்பத்தூர், உள்ளிட்ட இடங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் இன்னும் கூடுதலாக பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Read more – மாஸ்க் இல்லையா ? இனி பெட்ரோல் கிடையாது.. அமலாகிறது புதிய கட்டுப்பாடு
தொடந்து, பேருந்து பயணத்தின்போது பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.