வேலூர் அருகே நடந்த எருது விடும் விழாவில் காளைகள் முட்டியத்தில் துணை காவல் ஆய்வாளர் உள்பட 21 பேர் படுகாயமடைந்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் பொங்கல் பண்டிகையை யொட்டி எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. காளைகள் ஓடும் வீதிகளின் இருபுறமும் சவுக்கு கம்புகளால் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது.
எருது விடும் விழா காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடைபெற்றது. இந்த எருது விடும் விழாவில் பல்வேறு ஊர்களில் இருந்து 100க்கு மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டது. இதில் 8 காளைகள் உடற் தகுதியில்லாமல் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மீதம் இருந்த 90 க்கு அதிகமான காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடுவதற்கு அனுமதிக்கப்பட்டது.
Read more – படிக்கட்டில் நின்றதை கண்டித்த கண்டக்டர் : ஆத்திரத்தில் பஸ் கண்ணாடியை உடைத்த மாணவர்கள்
காளைகள் ஓடும் பாதையை வழிமறித்து நின்ற பார்வையாளர்களை தடுப்பு வேலிக்கு வெளியே நிற்கும்படி போலீசார் எச்சரித்து கொண்டிருந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டியத்தில் துணை காவல் ஆய்வாளர் சுரேஷ் படுகாயமடைந்தார்.அதனை தொடர்ந்து பின்னால் தொடர்ந்து வந்த காளைகள் பார்வையாளர்கள் 4 பேரை தாக்கியது. இதையடுத்து வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.