நிவர் மற்றும் புரெவி புயல் வெள்ள நிவாரணத்துக்காக தமிழகத்துக்கு ரூ.287 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் நிவர் புயலால் பாதிக்கப்பட்டது. பீகார், ஆந்திர மாநிலங்கள் தென்மேற்கு பருவமழை வெள்ளத்தால் கடும் சேதத்தை சந்தித்தன. மத்தியபிரதேச மாநிலம், காரிப் பருவ காலத்தில் பூச்சி தாக்குதலால் பாதிக்கப்பட்டது. இந்த சேதங்களுக்கு போதிய நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள் மத்திய அரசிடம் கோரி இருந்தன.
இந்த நிலையில், தேசிய பேரிடர் நிவாரண மேலாண்மை நிதியில் இருந்து 5 மாநிலங்களுக்கும் ரூ.3113.05 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
இந்த நிதியில் இருந்து ஆந்திராவுக்கு தமிழகத்துக்கு நிவர் புயல் பாதிப்புக்காக ரூ.63.14 கோடி, புரெவி புயல் பாதிப்புக்காக ரூ.223.77 கோடி என மொத்தம் ரூ.286.91 கோடி ரூ.280.78 கோடியும், பீகார் மாநிலத்துக்கு ரூ.1255.27 கோடியும், புதுச்சேரிக்கு ரூ.9.91 கோடியும், மத்திய பிரதேசத்துக்கு ரூ.1280.18 கோடியும் வழங்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.