அ.ம.மு.க. பொருளாளர் வெற்றிவேல் காலமானார்.
அ.ம.மு.க கட்சியின் பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேலுக்கு, சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, போரூர் ராமசந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெற்றிவேல் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை கடந்த சில தினங்களாகவே கவலைக்கிடமாக உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், செயற்கை சுவாச கருவிகள் கொண்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க.வின் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு 2011ஆம் ஆண்டு வெற்றிவேல் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
தொடர்ந்து, ஜெயலலிதா போட்டியிடுவதற்காக ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ பதவியை வெற்றிவேல் ராஜினாமா செய்தார்.
அடிகைத்தொடர்ந்து, அ.ம.மு.க. தொடங்கப்பட்டது முதல் அந்த கட்சியில் இணைந்து டிடிவி தினரனுக்கு அடுத்தபடியாகவும்,
அக்கட்சியின் பொருளாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வெற்றிவேல் உயிரிழந்து இருப்பது அ.ம.மு.க கட்சிக்கு பெரும் இழப்பாகவும், தொண்டர்களுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.