வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமை மிகுந்த தருணமாக உள்ளது என்று இந்திய வீரர் நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சிட்னி :
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் போட்டித்தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணியிடம் தோல்வியை தழுவியது. டி-20 போட்டியில் 2-1 என்ற கணக்கில் இந்தியா அணி தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 4 போட்டி கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த நிலையில், வருகின்ற 7 ம் தேதி 3 வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது காயம் காரணமாக கே.எல்.ராகுல் மற்றும் உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.
Read more – KGF- 2 படத்தின் லேட்டஸ்ட் ஷூட்டிங் புகைப்படங்கள்…. அதிரும் இணையதளம்..
தற்போது உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக இந்திய வீரர் நடராஜன் இந்திய அணிக்காக 3 வது டெஸ்ட் போட்டியில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை நிற ஜெர்சி அணிந்த புகைப்படத்தை பதிவிட்டு கூறியதாவது :- வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்து வரும் சவால்களை எதிர்கொள்ள தயார் என குறிப்பிட்டுள்ளார்.