திருவள்ளுவர் மண்ணுக்கு வந்துள்ளது பெருமையளிப்பதாக புதிதாக பதவியேற்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி கடந்த டிசம்பர் மாதத்துடன் ஓய்வுபெற்றார். கொலிஜியம் பரிந்துரைப்படி புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
சென்னை ஆளுநர் மாளிகையில் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் இன்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சஞ்ஜீப் பானர்ஜிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் 50 வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
பின்னர் தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜிக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பதவியேற்ற பின்பு உரையாற்றிய சஞ்ஜிப் பானர்ஜி, இந்தியாவிலேயே மொழியின் பெயரைக் கொண்டுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் எனவும், திருவள்ளுவரின் மண்ணுக்கு வந்துள்ளது பெருமை அளிக்கிறது என்றும் கூறினார்.
தமிழகத்தை என்னுடைய மற்றொரு தாய்வீடாகவே கருதுகிறேன். தொன்மையான மொழியாம் தமிழை இன்னும் கோடிக்கணக்கான பேர் செருக்கோடு பெருமையோடும் பேசி வருகின்றனர்: முதலில் நான் ஒரு நீதிபதியாக பணியாற்றுவேன். அதன்பிறகுதான் தலைமை நீதிபதி என்ற அவர்,
read more: கூட்டணிக் கட்சிகள் தனிச் சின்னத்தில் நிற்கலாம்: துரைமுருகன்
பாரம்பரியமிக்க கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து இன்னொரு பாரம்பரியமிக்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்துள்ளது தனக்கு பெருமை அளிப்பதாகவும், வழக்கறிஞர்களின் ஒத்துழைப்பின்றி நீதி பரிபாலனம் சாத்தியமில்லை என வலியுறுத்தினார்.