கேரளாவில் மீனவர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
கேரளா :
கேரள மாநிலத்தில் கடந்த 2 தினங்களாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சுற்று பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் அவர் பேசுகையில், வடஇந்தியாவில் 15 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த பிறகு கேரளாவுக்கு வந்துள்ளேன். இங்கே பிரச்சினைகளை மக்கள் மேம்போக்காக அல்லாமல், ஆழமாக அலசுவது எனக்கு புத்துணர்வு அளிக்கிறது என்று தெரிவித்தார்.
மேலும், நான் மீனவர்களின் நண்பனாக கலந்துகொண்டு கடலில் மீன் பிடித்தேன். அப்போது எனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைத்தது. நீங்கள் படும் கஷ்டம் எனக்கு நன்றாகவே புரிகிறது. எனவே நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்காக தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
Read more – பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் இனி தனியார்மயமே..மோடி தீட்டிய அடுத்த திட்டம்
தற்போது இதுகுறித்து மத்திய மீன்வளத்துறை அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவிக்கையில், மீன்வளத்துறைக்கென்று தனி அமைச்சகம் இருப்பது கூட தெரியாமல் ராகுல் காந்தி இருப்பது வியப்பாக உள்ளது. ராகுல் காந்தி திட்டமிட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார் என்று தெரிவித்தார்.ஏற்கனவே கடந்த வாரம் புதுச்சேரியிலும் ராகுல் காந்தி இதையே சொல்லிருந்தது குறிப்பிடத்தக்கது.