சென்னை டி.நகர் இல்லத்தில் சசிகலாவை சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், ராதிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
சென்னை :
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு தொண்டர்களிடம் உரையாற்றிய அவர்,
நான் கொரோனாவில் இருந்தபோது கழக உடன்பிறப்புகள், பொதுமக்கள் எல்லோருடைய வேண்டுதலாலும் நலம் பெற்று தமிழகம் வந்தேன். ஜெயலலிதாவின் உண்மையான உடன் பிறப்புகள் ஒன்றிணைந்து மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
Read more – அனைவரும் ஒன்றாக, தேர்தலில் வென்றாக வேண்டும் – சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வு
இந்தநிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் ராதிகா நேரில் சென்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு சசிகலாவை சந்தித்து நலம் விசாரித்தனர். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரிக்க வந்தோம் தெரிவித்தனர்.