காங்கிரஸ் தலைவருக்கான தேர்தலை வரும் ஜூன் மாதம் நடத்துவது என காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவியில் நீடிக்க வற்புறுத்திய போதிலும் அவர் மறுத்துவிட்டார். தலைவர் நியமிக்கப்படும் வரை இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இடைக்கால தலைவராக நியமிக்கப்பட்டார். உட்கட்சித் தேர்தலை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று இணைய வழியாக நடைபெற்றது. அதில், தலைவர் தேர்தல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சிதம்பரம், முகுல் வாஸ்னிக் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், உடனடியாக தேர்தலை நடத்த கோரிக்கை விடுத்தனர். ஏ.கே.அந்தோனி, அசோக் கெலாட், அமரீந்தர் சிங், தாரிக் அன்வர், உம்மன் சாண்டி ஆகியோர் 5 மாநிலத் தேர்தல்களுக்குப் பிறகு தலைவர் தேர்தலை நடத்தலாம் எனக் கூறினர்.
read more: சசிகலா உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை தகவல்!
கூட்டத்திற்கு பின்னர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் செய்தியாளர்களை சந்தித்தார். வரும் ஜூன் மாதம் காங்கிரஸின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்




