சென்னை – தஞ்சை மாவட்ட தி.மு.க. நிர்வாக வசதிக்காக பிரிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை
சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. நிர்வாக வசதிக்காகவும், கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெற்றிடவும், சென்னை வடக்கு – சென்னை வடகிழக்கு என 2 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
சென்னை வடகிழக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் மாதவரம், திருவொற்றியூர் சென்னை வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக மாதவரம் எஸ். சுதர்சனம் நியமிக்கப்படுகிறார்.
மேற்கு-தென்மேற்கு
சென்னை வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம். சென்னை வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் இளைய அருணா செயல்படுவார்.
சென்னை மேற்கு மாவட்டம் சென்னை மேற்கு – சென்னை தென்மேற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது. சென்னை தென்மேற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் தி.நகர், மயிலாப்பூர், சென்னை தென்மேற்கு மாவட்டப் பொறுப்பாளர் மயிலை வேலு செயல்படுவார். சென்னை மேற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணாநகர். சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளராக சிற்றரசு செயல்படுவார்.
தஞ்சை
தஞ்சை வடக்கு, தஞ்சை தெற்கு மாவட்ட தி.மு.க., தஞ்சை வடக்கு மாவட்டம், தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை தெற்கு மாவட்டம் என 3 மாவட்டங்களாகப் பிரிக்கப்படுகிறது.
தஞ்சை வடக்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம். தஞ்சை வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக கல்யாணசுந்தரம் செயல்படுவார்.
தெற்கு, மத்திய
தஞ்சை மத்திய மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் தஞ்சாவூர். தஞ்சை மத்திய மாவட்டப் பொறுப்பாளர் துரை.சந்திரசேகரன் செயல்பட உள்ளார்.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவை தொகுதிகள் பட்டுக்கோட்டை, பேராவூரணி, தஞ்சை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் ஏனாதி.ப.பாலசுப்ரமணியம் செயல்பட உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.