நடிகர் விக்ரமின் 30 ஆண்டு சினிமா பயணம் குறித்து கலைப்புலி s.தாணு பாராட்டு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விக்ரம். இவர் கடந்ந்த 1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி என்ற படத்தில் அறிமுகமானார்.
இதுவரை தேசிய விருது பெற்ற நடிகராவார். இவர் தன் திறமையின் மூலம் இன்றும் பல முன்னணி நடிகர்களுக்கு போட்டியாக உள்ளார்.
இவர் நடித்த சாமி, தில்,தூள் போன்ற படங்கள் வசூல் ரீதியாகச் சாதனை படைத்தன.
இந்நிலையில் நடிகர் விக்ரம் சினிமாவுக்கு வந்து 30 வருடங்கள் ஆனதையொட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் comminDp வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தானு தனது டுவிட்டர் பக்கத்தில்,’ 30 ஆண்டுகளாக திரையுலகில் சாதனை நாயகனாக திகழ்வது கடினம், தனக்கான இடத்தை தக்கவைத்து கொண்ட #ChiyaanVikram #SpecialCommonDP வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி #30InspiringYearsOfVIKRAM ‘என்று தெரிவித்துள்ளார்.