தாஜ்மகால் 6 மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கொரோனவால் எல்லா இடங்களும் மூடப்பட்டது. இப்போது பல இடங்கள் தளர்வுகளுடன் இயங்குகிறது. அதேபோல கடந்த 6 மாதமாக தாஜ்மகால் மூடப்பட்டு கிடந்தது. பராமரிப்பு பணிகள் மட்டும் நடைபெற்று வந்தன. தாஜ்மகால் மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
அதுபோல ஆக்ராவில் தாஜ்மகாலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை வைத்து வாழ்க்கை நடத்தி வரும் மக்களும் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். எனவே தாஜ்மகாலை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து இன்று தாஜ்மஹால் திறக்கப்பட்டது.
தாஜ்மஹால் திறக்கப்பட்டு முதல் நாளான இன்று பல நூறு பேர்கள் வந்து குவிந்தனர். சமூக இடைவெளியுடன் பிரித்து அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பேரை தாஜ்மகாலுக்குள் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக அவர்களை பிரித்து இடைவெளி விட்டு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர்.
தாஜ்மஹாலுக்குள் நுழையும் முன்பு கிருமி நாசினியால் தன கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வழக்கம் போல தாஜ்மகாலுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.