கள்ள நோட்டு மாற்றிய நில புரோக்கர் கைது செய்யப்பட்டார்.
பட்டாளம் மார்க்கெட்டில் கடைநடத்தி வருபவர் கண்ணன். இவரின் காய்கறி கடையில் நேற்று முன்தினம் காய்கறி வாங்கிய நபர், ரூ.500 நோட்டை கொடுத்துள்ளார். அப்போது அந்த ஐந்து நூறு ருபாய் நோட் மிகவும் வித்யாசமாக இருந்ததால் சந்தேகம் அடைந்த கடைக்காரர் புளியந்தோப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த மர்ம நபரை பிடித்து அவர் கொண்டு வந்த 500 ரூபாய் நோட்டை பறிமுதல் செய்து சோதனை நடத்தியுள்ளனர். அதில் அவர் கொண்டு வந்த ரூபாய் கள்ளநோட்டு என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து அந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் கொளத்தூர் ஜவகர் நகரை சேர்ந்த ரசாக் நீயாஸ் சேட் என்பதும் ரியல் எஸ்டேட் புரோக்கர் என்பதும் தெரியவந்தது. மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றது.