தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தருமபுரி,திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி,சேலம்,நாமக்கல்,கரூர்,திருச்சி,திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் .ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் 15 செ.மீ.மழை பதிவாகியுள்ளது.