ஆலையை திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் மெட்ராஸ் உயர் நீதி மன்றத்தில் மனு – என்ன நடந்தது?
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை மே 28,2018 ஆம் தேதி மூடப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீண்டும் திறக்கக் கோரி இயற்கை வள நிறுவனமான வேதாந்தா உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால் அவ்வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது
அந்த தீர்ப்பு மே மாதம் 20ஆம் தேதி 13 பேரை பலி வாங்கிய காவல்துறை துப்பாக்கிச்சூட்டிற்கான எதிர்வினை என்று நீதிபதிகள் டீ.ஸ்.சிவஞானம் மற்றும் வி. பவானி சுப்பாராயன் கூறி வேண்டுகோளை நிராகரித்தனர். சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அந்த ஆலை ‘red category’ எனும் பிரிவைச் சேர்ந்ததால், பிரத்யேக அபாயகர மண்டலங்களில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும், அந்த ஆலை தேசிய பூங்காவிலிருந்து 25 கிம் தொலைவில் இருப்பதாகவும், பூங்காவிற்கு தகவல் தெரிவிக்கத் தாமதம் ஆனதால் மட்டுமே இடமாற்றம் ஏற்படவில்லை என்றும் கூறினர்
எதிர்ப்பாளர்கள் மற்றும் மக்கள் தீர்ப்பை பெரிதும் வரவேற்றனர். இதற்காக 25 ஆண்டுகள் போரிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோ அவர்கள் மிகவும் வரவேற்றார்.
இதைத் தொடர்ந்து இடமாற்றம் செய்ய எந்த யோசனையும் இல்லை என வேதாந்த நிறுவனத் தலைவர் பங்கஜ் குமார் தெரிவித்தார்